மணமேல்குடி அரசு மருத்துவமணையில் எம்எல்ஏ இராமச்சந்திரன் ஆய்வு




மணமேல்குடி அரசு மருத்துவமணையில் எம்எல்ஏ இராமச்சந்திரன் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அப்சர் என்ற சிறுவன் இறந்தான். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அறந்தாங்கி  எம்எல்ஏ இராமச்சந்திரன் 23-01-204 அன்று மருத்துவமனையை ஆய்வு செய்தார்.  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்  வருகையை ஆய்வு செய்து, உள்நோயாளிகள் பிரிவு, கழிவறை, பிணவறை உள்ளிட்ட மருத்துவமணை முழுவதும் ஆய்வு செய்து சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மணமேல்குடி ஆவுடையார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments