அறந்தாங்கி அருகே குதிரை-மாட்டு வண்டி எல்கை பந்தயம்




அறந்தாங்கி அருகே குதிரை-மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே எரிச்சி, சிதம்பரவிடுதி, பொய்யாப்பட்டி ஆகிய கிராமத்தில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் முதலாம் ஆண்டு குதிரை, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 12 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.

எல்கை நோக்கி சீறிப்பாய்ந்தன

இதில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு போய் வர 8 மைல் தூரமும், நடு மாட்டு வண்டிக்கு போய் வர 6 மைல் தூரமும், கரிச்சான் மாட்டு வண்டிக்கு 5 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுக்கு போய் வர 4 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதைப்போல் குதிரை வண்டிக்கும் போய் வர 8 மைல் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டது. பந்தயத்தில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

பரிசு

இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், கோப்பைகள் வழங்கப்பட்டன.

பந்தயத்தை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் திரண்டு இருந்து கண்டு ரசித்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments