தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூர் ஊராட்சியில் கீழ சேத்தி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி அவர்களின் கணவர் பூமிநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மயான பராமரிப்பு பணிகளுக்காக இந்து சமய அறநிலைத்துறை கீழ் உள்ள நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் பிறகு பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடையூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனை மரங்களை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் வெட்டிய குற்றத்திற்காக 427 பிரிவின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது முதல் தகவல் அறிக்கையை திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச் சேரி ராஜா கூறுகையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது தமிழகத்தின் மாநில மரம் பனையை வெட்டிய குற்றத்திற்காக எடையூர் காவல் துறையினர் – வருவாய் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர்.
இதுக்குறித்து பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் “தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக்கான தனி நிதி அறிக்கையில் அறிவித்திருந்தும் பனை மரங்களை வெட்டி வீழ்த்தும் அவலநிலை தொடர்வதால் தமிழக அரசு உடனடியாக அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டுமென வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.