அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு




அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது எப்போது என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம் 2 நகராட்சிகளை உள்ளடக்கியதில் அறந்தாங்கியும் ஒன்று. அறந்தாங்கியில் தற்போது உள்ள பஸ் நிலையத்திற்கு பதிலாக புதிதாக இடவசதியுடன் கூடிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

அறந்தாங்கியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், மாவட்டத்திற்குள்ளும் அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரித்தல், பஸ்கள் இயக்குவது அதிகரிப்பு போன்ற காரணங்களால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ட வுன் பஸ், புறநகர் பஸ்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இதனால் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான திட்டம் தீட்டப்பட்டன. ஆனால் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கான திட்டம் அப்படியே கிடப்பில் உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு தேவையான நிலம் பெறப்படுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதக கூறப்படுகிறது.

இதனை நிவர்த்தி செய்து விட்டு பணிகள் மேற்கொள்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments