தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ஈச்சங்காடு - மாத்தூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட சில ரயில்கள் புதன்கிழமை (பிப்.21) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட திருச்சி - விழுப்புரம் ரயில் பாதையில் அமைந்துள்ள ஈச்சங்காடு - மாத்தூர் இடையே பொறியியல் பணிகள் புதன்கிழமை (பிப்.21) மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் குறிப்பிட்ட சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் செல்லவுள்ளன.
நாளை(பிப்.21) முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
* விருத்தாச்சலத்திலிருந்து காலை 6 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 06891),
* திருப்பாதிரிப்புலியூரிலிருந்து காலை 6.05 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06889),
* திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 20666),
* சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு திருநெல்வேலிக்குப் புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில்(வண்டி எண் 20665),
* திண்டுக்கலிலிருந்து காலை 5 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16868),
* விழுப்புரத்திலிருந்து மாலை 4.50 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16867) புதன்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தாமதம் (DELAY)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12635), புதன்கிழமையன்று விழுப்புரம் - ஈச்சங்காடு இடையே 60 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்படும்
மாற்றுப் பாதையில் இயக்கம்: (Diversion)
* சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை 9.45 மணிக்குப் புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண்16127) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும். இந்த ரயில் கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூரில் நின்று செல்லும்.
* குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் (வ.எண் 22671) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்லும்.
* மதுரையிலிருந்து கச்சிகுடாவுக்கு புதன்கிழமை காலை 5.30 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (வ.எண் 07192) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 5.30 மணிக்குப் புறப்படும் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (12606) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும். இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 6.40 மணிக்குப் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி 12636) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.