நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. அதேபோல் இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் உள்ளன. இவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் மீன் பிடித்தல் சம்பந்தமாக நாட்டு படகிற்கும், விசைப்படகிற்கும் தனித்தனியே விதி உள்ளது. 5 நாட்டிக்கல் தூரத்திற்கு அப்பால் தான் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்று விதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விசைப்படகு மீனவர்கள் 5 நாட்டிக்கல் குறைவான பகுதிகளிலேயே மீன்பிடிப்பதாக நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாற்றி வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.
விசைப்படகுகள் சிறைபிடிப்பு
இந்நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 விசைப்படகுகள் கரைப்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளை அப்பகுதியை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடித்து சென்றனர்.
இந்த சம்பவம் அறிந்த கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் மீன்வளத்துறையினர் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.