கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிமம் பெறாமல் விற்றால் நடவடிக்கை வேளாண் அதிகாரி எச்சரிக்கை




கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிமம் பெறாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டி கடைகள், மளிகை கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலிவிஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லி சட்டப்படி குற்றமாகும். வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை கடைகளில் விற்கவும் உரிமம் பெறுவது அவசியமாகும்.

இதற்கு தேவையான உரிமத்தினை பெறத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.500 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7,500/- செலுத்தியும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.100 என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1,500 செலுத்தியும் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

எலிக்கொல்லி பற்பசை

பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் தமிழக அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு பயன்பாட்டு பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments