புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சம்பா அறுவடை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் 2 லட்சத்து 2 ஆயிரத்து 401 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சம்பா நெல் அறுவடை தொடங்கியது. பொங்கலுக்கு பின் இந்த அறுவடை தற்போது மும்முரமாக நடைபெற்றது. விவசாயிகள் தங்களது வயல்களில் சாகுபடி செய்த நெற்பயிர்களை அறுவடை எந்திரங்கள் மூலமும், தொழிலாளர்கள் மூலமும் அறுவடை செய்கின்றனா்.
கொள்முதல் நிலையங்கள்
அறுவடை தீவிரமடைந்ததால் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு தரப்பில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்தடுத்து அறுவடை அதிகரித்துள்ளதால் நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து மேலும் 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.