மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




மணமேல்குடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து 74 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது சாலையோரங்களில் நின்றிருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

பரிசு

பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை சீவலப்பேரி மாட்டு வண்டியும், 2-வது பரிசை மாவூர் மாட்டு வண்டியும், 3-வது பரிசை பேராவூரணி மாட்டு வண்டியும், 4-வது பரிசை எஸ்.பி. பட்டினம் மாட்டு வண்டியும் பெற்றன.

இதேபோல் நடு மாடு, கரிச்சான் மாடு பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகள் மற்றும் பெரிய மாடு பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. பந்தயத்தை மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments