மணல் திட்டில் தவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் இலங்கை அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர போலீசாருக்கு தகவல் வந்தது.
ராமேசுவரம் கடலோர போலீசார் மற்றும் தனிப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் 1-வது மணல் திட்டுக்கு சென்றனர். அங்கு தீவில் 3 குழந்தைகளுடன் தம்பதி தவித்து கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் 5 பேரையும் படகில் ஏற்றி தனுஷ்கோடி கடற்கரை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். தீவிர விசாரணை நடந்தது.
விசாரணையில் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது42), அவருடைய மனைவி சங்கரி (26), இவர்களது குழந்தைகள் ஜெர்சிகா, ஜெபிசிகா, அனுஷ்கா ஆகியோர் என்று தெரியவந்தது.
இலங்கை மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடற்கரையில் இருந்து படகோட்டிக்கு இலங்கை பணம் ரூ.13 ஆயிரம் கொடுத்து அங்கிருந்து படகில் தப்பி அகதிகளாக வந்து, நடுக்கடலில் உள்ள 4-வது மணல் திட்டில் இறங்கி உள்ளனர். பின்னர் படகோட்டிகள் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அன்று இரவு முழுவதும் அவர்களை யாரும் மீட்க வரவில்லை. நேற்று முன்தினம் இரவு மீண்டும் இலங்கையில் இருந்து வந்த படகில் ஏறியுள்ளனர். இதையடுத்து 1-வது மணல் திட்டில் அவர்களை இறக்கிவிட்டு படகோட்டிகள் சென்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
காரணம் என்ன?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக நந்தகுமார், சங்கரி ஆகியோர் கூறினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.