சம்பைப்பட்டினத்தில் நடைபெற்ற 5 மாவட்டங்களுக்கான தப்லீக் இஜ்திமா!




சம்பைப்பட்டினத்தில்      5 மாவட்டங்களுக்கான தப்லீக் இஜ்திமா நடைபெற்றது 

தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டம் பேராவூரணி தாலுகா சேதுபாவசத்திரம் அருகே சம்பைப்பட்டினத்தில்  தப்லீக் ஜமாத் சார்பில் மாபெரும் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் காரைக்கால்  5 மாவட்டங்களுக்கான   இஜ்திமா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு  பிப்ரவரி 07 செவ்வாய்க்கிழமை சுபுஹ் தொழுகை முதல் பிப்ரவரி 08 வியாழக்கிழமை இஷா வரை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த இஜ்திமாவில் 5 மாவட்டங்களை சேர்ந்த பல ஊர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும்   தன்னார்வலர்கள் ஏரளாமோனார் கலந்து கொண்டனர்.

இந்த இஜ்திமாவில் பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவாக நிகழ்த்தினர்.

இஜ்திமாவில் பங்கேற்ற மக்களின் பயன்பாட்டுக்காக அங்கு தற்காலிக தண்ணீர் பைப்புகள் அமைக்கப்பட்டன. அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. மாநாட்டு திடலை சுற்றி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, அந்த கடைகளில் உணவு, குடிநீர் மற்றும் ஏராளமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோல் ஐவேளைத் தொழுகையும் மாநாட்டு திடலிலேயே தொழுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக இஜ்திமா ஏற்பாட்டாளர்கள் மூலம் சில ஊர்களில் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இஜ்திமாவை முன்னிட்டு சம்பைட்டினத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments