குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு... நியாய விலைக் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு!




தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் பதிவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க கைரேகை பதிவு அவசியமானதாக இருக்கிறது. தொடக்கத்தில் இயந்திர கோளாறு காரணமாக கைரேகை வைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் சில சமயங்களில் இயந்திரத்தின் உதவியின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
முறைகேடாக விற்கப்படும் ரேஷன் அரிசி

கைரேகை பதிவு

தற்போது தொழில்நுட்ப வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கைரேகை வைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் பொருட்கள் வழங்கப்படும் என்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் கறார் காட்டினர். இதுதொடர்பாக தமிழக அரசு உத்தரவு ஏதும் பிறப்பித்ததா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. உயர் அதிகாரிகள் உத்தரவு என்று கூறி ஊழியர்கள் கண்டிப்பு காட்டி வந்தனர்.



தமிழக அரசு உத்தரவு

இந்நிலையில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவிற்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது. விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும். பயனாளிகளுக்கு எந்த இடையூறு இல்லாமல் குழப்பமின்றி பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் ஆறுதல்

இந்த உத்தரவு குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த வாரம் நியாய விலைக் கடையில் மற்றொரு சர்ச்சை வெடித்திருந்தது. அதாவது, நியாய விலைக் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று கூறி நியாய விலைக் கடை ஊழியர்கள் பரபரப்பை ஏற்படுத்தினர்.


காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியா? - தமிழக அரசு முக்கிய விளக்கம்!

நியாய விலைக் கடைகளில் ஏற்பாடு

இதற்கு பதிலளிக்கும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள பயனாளர்கள் நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்க்கப்பட வேண்டும். அதேசமயம் பயனாளர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் வசதிக்காக புதுப்பித்து கொள்ளுங்கள்.

பயோமெட்ரிக் விவரம்

தற்போது வரை 63 சதவீத குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன. எஞ்சிய அட்டைதாரர்களின் விவரங்கள் படிப்படியாக சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி தனி முகாம்கள் நடத்தப்படும். தேவை ஏற்படின் வீடுகளுக்கே சென்று புதுப்பிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்கி உணவு தேவையை பூர்த்தி செய்வதே அரசின் நோக்கம். எனவே குடும்ப அட்டையில் இருந்து பெயர் ரத்து செய்யப்படாது. பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments