வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி TNTJ நடத்திய புதுக்கோட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்




கியான்வாபி பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில் பூஜை செய்து கொள்ள  வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாபர் மசூதியையும், இதுபோன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தித்தான் இஸ்லாமிய தரப்பிடமிருந்து பறித்தனர். அடுத்து காசி மற்றும் மதுராவில் உள்ள பள்ளிவாசல்களை பறிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்  முன்னெடுத்து வருகின்றன.

1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம், இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது, எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ, அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது. ஆனால், அதற்கு மாற்றமான நடவடிக்கைகளில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

ஜனநாயகமும், சட்ட நெறிமுறைகளும் குழித் தோண்டிப் புதைக்கப்படும் இக்காலக் கட்டத்தில். ஜனநாயக ரீதியாக எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும், அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். 

அந்த அடிப்படையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக, இன்று 10.02.2024 சனிக்கிழமையன்று, புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள், மாநிலப் பேச்சாளர் பா. அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்தும், ஆளும் ஒன்றிய அரசு இப்பிரச்சினைகளை இந்நேரத்தில் கையிலெடுப்பதன் பின்னனி குறித்தும் பேசினார்கள். 
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்டப் பொருளாளர் ரபீக் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது மீரா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் குலாம் முகமது பாட்ஷா, ஷேக் அப்துல்லாஹ், புதுகை மீரான் மைதீன், மாவட்ட மருதுவர் அணிச் செயலாளர் சபியுல்லாஹ், மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் இல்யாஸ் மற்றும் மாவட்டத் தொண்டர் அணிச் செயலாளர் ஹாஜா மொய்தீன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என ஆயிரக்கணக்கானவர்கள் எழுச்சியோடு கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் துணைச் செயலாளர் குலாம் முகமது பாட்ஷா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments