அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தினையாக்குடி- திருநெல்லிவயல் ஆகிய கிராமத்தில் தைப்பூச திருநாளையொட்டி முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் நடுமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் நடு மாடு வண்டிக்கு போக வர 5 மைல் தூரமும், சின்ன மாடுக்கு போக வர 4 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பரிசு

இதில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது சாலைகளில் கூடிநின்ற பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

பந்தயத்தில் பெரிய மாடு, சின்னமாடு பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பகைள் வழங்கப்பட்டது. பந்தயத்தை காண சாலையின் இரு புறமும் திரளான ரசிகர்கள் திரண்டு நின்று கண்டு ரசித்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments