கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!



கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் நேற்று 13.02.2024 பள்ளி வளாகத்தில்  ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை காவல் கண்காணிப்பாளர் R.V.கெளதமன் கலந்து கொண்டார். மேலும் கோபாலப்பட்டிணம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாலமன், முன்னாள்  இந்நாள் மாணவர்கள், ஊர் ஜமாத்தார்கள்,, PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள், SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள்   என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில்  முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டு பயிலும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

அதே போல்   இந்த ஆண்டுகலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

சுதந்திர தின விழா  விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வட்டார அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற கபடிக்குழு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்தவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஆண்டு விழாவில் பங்கேற்ற  மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments