புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் நேற்று 13.02.2024 பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை காவல் கண்காணிப்பாளர் R.V.கெளதமன் கலந்து கொண்டார். மேலும் கோபாலப்பட்டிணம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாலமன், முன்னாள் இந்நாள் மாணவர்கள், ஊர் ஜமாத்தார்கள்,, PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள், SMC தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல் இந்த ஆண்டு பயிலும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதே போல் இந்த ஆண்டுகலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சுதந்திர தின விழா விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வட்டார அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்ற கபடிக்குழு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்தவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.