மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு கல்விக்கடன் முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
கல்விக்கடன் முகாம்
தமிழ்நாடு அரசு உத்தரவின் படி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் "மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம்" புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் மாவட்டத்திற்குள் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் படித்து கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளும் கல்விக்கடன் பெற தகுதியுடையவர் ஆவர்.
சான்றிதழ்கள்
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ-மாணவிகள் ஏற்கனவே www.vidyalakshmi.co.in அல்லது https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான விண்ணப்ப நகலுடன் வரலாம். இல்லையெனில் புதிதாக விண்ணப்பிக்க ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 (மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்), பான் கார்டு, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்றிதழ், வருமான சான்று, சாதிச்சான்று, இருப்பிட சான்று, கல்லூரி கட்டணங்களுக்கான சான்று ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.