சாலையில் கிடந்த ரூ.13 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த மாணவர்கள் கமிஷனர் பாராட்டு




மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்ரகுமான், வினித். இவர்கள் இருவரும் வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சம்பவத்தன்று இருவரும் பள்ளி முடிந்து மகபூப்பாளையம் ஜின்னாதிடல் அருகே நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள டீக்கடை அருகே சாலையில் ரூ.13 ஆயிரத்து 400 கிடப்பதை பார்த்தனர். அந்த பணத்தை எடுத்த அவர்கள் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த பணத்தை உரியவர்களிடம் சேர்க்குமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர். பணத்தை ஒப்படைத்த மாணவர்களின் நேர்மை குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் மாணவர்கள் இருவரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments