மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்ரகுமான், வினித். இவர்கள் இருவரும் வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சம்பவத்தன்று இருவரும் பள்ளி முடிந்து மகபூப்பாளையம் ஜின்னாதிடல் அருகே நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள டீக்கடை அருகே சாலையில் ரூ.13 ஆயிரத்து 400 கிடப்பதை பார்த்தனர். அந்த பணத்தை எடுத்த அவர்கள் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த பணத்தை உரியவர்களிடம் சேர்க்குமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர். பணத்தை ஒப்படைத்த மாணவர்களின் நேர்மை குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் மாணவர்கள் இருவரையும் நேரில் அழைத்து அவர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.