மணமேல்குடி அருகே இறந்தவர் உடலை தண்ணீரில் புதைக்கும் அவல நிலை




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே காரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோழிச்சனம் ஆதிதிராவிட காலணி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட  குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதில்  ருக்மணி (70) என்பவர் வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டார். இந்த நிலையில் இறந்தவர் உடலை புதைப்பதற்கு ஒரு அடி குழி தோன்டினாலே தண்ணீர் வருகிறது. இதனால்  இறந்தவர் உடலை தண்ணீரிலேயே அடக்கம் செய்யக்கூடிய  அவல நிலை ஏற்படுகிறது. மயான கொட்டகை அமைத்து தரவும், பள்ளமான பகுதியை மேடாக்கி தரவும், மயான (சுடுகாடு) இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பலமுறை அரசு அதிகாரிகளிடம்  இப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை வைத்தும்  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து இப்பகுதியில்  உள்ள  மயான இடப்பகுதியை மேடாக்கி, மேற்கூரை வசதி  ஏற்படுத்தி இறந்தவர்களின்  உடலை அடக்கம் செய்ய வழிவகை செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க தவறினால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments