புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகம்




வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி கடந்த ஆண்டு (2023) நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் திருத்தம் மேற்கொண்ட வாக்காளர்களுக்கும் புதிய அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து தேர்தல் அலுவலகம் மூலம் அந்தந்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி மைய மண்டல அலுவலர்கள் நியமிக்கும் பணியும் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக தேர்தல் அலுவல் தொடர்பான பணிகளை அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments