தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வரக்கூடிய பல்வேறு அவசரமான இரத்த தேவைகளை அரசுடன் இணைந்து இரத்த தான தன்னார்வ அமைப்புகள் பூர்த்தி செய்து நோயாளிகள் பூரண குணமடைய எந்த வித பிரதிபலன்களையும் பாராமல் உதவி வருகின்றனர்
தற்போதைய சூழ்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் அதிக அளவில் இரத்த தேவைகள் வந்தவண்ணம் இருப்பதை கருத்தில்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பு தொடர் இரத்த கொடையாளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல் வளாகத்தில் இன்று16.02.2024 காலை 12மணி முதல் தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாமை நடத்தினர்.
இம்முகாமில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 100 இரத்த கொடையாளர்களின் விபரங்கள் அவர்களின் முழு விருப்பத்துடன் பெறப்பட்டது.
இந்த முகாமை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அதிராம்பட்டினம் நகர தலைவர் அப்துல் மாலிக் தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.
இம்முகாமில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட ஆலோசகர் வ.விவேகானந்தம், அதிராம்பட்டினம் நகர துணைதலைவர் நூர் முஹம்மது மற்றும் மாவட்ட குருதி கோடை ஒருங்கிணைப்பாளர் பாய்ஸ் அகமது மற்றும் உறுப்பினர் ஏ.முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு இரத்த தானத்தின் அவசியம், யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்பது போன்ற பல விபரங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.