அறந்தாங்கியில் ஏரி, கண்மாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை




அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், தாசில்தார்கள் திருநாவுக்கரசு (அறந்தாங்கி), மார்ட்டின் லூதர்கிங் (ஆவுடையார்கோவில்), சேக் அப்துல்லா (மணமேல்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:- கட்டுமாவடியில் இருந்து அறந்தாங்கிக்கு மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை 8.30 மணியளவில் கூடுதலாக அரசு பஸ் இயக்க வேண்டும். பெருங்காடு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதேபோல் நாகுடி மின் நிலையத்தில் இருந்து பெருங்காடு சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்து கொடுக்க வேண்டும்.

அறந்தாங்கி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றுவதுடன், அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அறந்தாங்கியில் உள்ள அனைத்து கண்மாய்களும், ஏரிகளும் தூர்வரப்படாமல் உள்ளன. மேலும், செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. எனவே ஏரி, கண்மாய்களை தூர்வார வேண்டும். மேலும் பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments