`உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் திட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சென்றிருந்தார். அறந்தாங்கி அருகே சிலட்டூர் தொடக்கப்பள்ளிக்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மதிய நேரத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே சாப்பிட்டார். மேலும் சாப்பிட்டு கொண்டே மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ-மாணவிகளின் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டறிந்தார். இதில் ஒரு மாணவி தான் டாக்டர் ஆக வேண்டும் என லட்சியம் வைத்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு அந்த மாணவியிடம் எதற்காக டாக்டராக வேண்டும் என நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அந்த மாணவி, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தெரிவித்தார். அதற்கு டாக்டர் ஆகாமல் போலீஸ் என வேறெந்த துறையிலும் மக்களுக்கு உதவி செய்யலாமே என்றார். இதற்கு அந்த மாணவி மருத்துவ சேவை செய்வதற்காக டாக்டர் ஆக விரும்புவதாக தெரிவித்தார். அந்த மாணவிக்கு போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வாழ்த்து தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.