ஆசிரியர் ஜபருல்லா (முன்னாள் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர்) அவர்களுக்கு பாராட்டு விழா!




அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக, கரம்பக்குடி வட்டாட்சியரும், ஆசிரியருமான திரு ஜபருல்லா அவர்களுக்கு அவரது 30 ஆண்டு கால கல்வி சேவையை பாராட்டி, பாராட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 19/02/2024 அன்று, ரஞ்சிதம் அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அறந்தாங்கி ஐ எம் ஏ தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையும், அறந்தாங்கி ஐ எம் ஏ முன்னாள் தலைவர் டாக்டர் லட்சுமி நாராயணன், சி பி ஐ எம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தோழர் கவிவர்மன், புதுக்கோட்டை மாவட்ட அரசு வலுக்கறிஞர் திரு. வெங்கடேசன், ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு சேக் சுல்தான், யாழ் பள்ளி நிறுவனர் திரு சேதுராமன், கே பி எஸ் எஸ் சி தலைவர் சுப்பிரமணியன், அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டி ஏ என் பீர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திரு சுரேஷ் குமார், மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணியின் மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, புதுக்கோட்டை தமுஎகச  திரு கஸ்தூரி ரங்கன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் தொல்காப்பியன், மணமேல்குடி வட்டார வள மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம் சிபிஐ எம் எல் அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் தோழர் மதிமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவின் தொடக்க உரையை அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தியும், வரவேற்புரையை அதன் பொருளாளர் திரு முகமது முபாரக் அவர்களும் நிகழ்த்தினர்.

   கவிஞர் ஜீவி சிறப்புரை நிகழ்த்தினார். ஏற்புரையை கரம்பக்குடி வட்டாட்சியர் திரு ஜபருல்லா அவர்கள் நிகழ்த்தினார்.

     திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு சேது புகழேந்தி நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியை திரு கபார்கான் தொகுத்து வழங்கினார்.

   விழாவிலே அவரது 30 ஆண்டு கால கல்விச் சேவையும், சமூக சேவையும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments