காஷ்மீரின் ஜம்மு நகரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு 53 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. டிரைவர் மாறுவதற்காக காஷ்மீரின் கதுவா ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து ரெயில் டிரைவரும், உதவியாளரும் ரெயிலில் இருந்து இறங்கி சென்றனர். அதே சமயம் அவர்கள் ‘ஹேண்ட் பிரேக்’ போடாமல் கீழே இறங்கி சென்றனர்.
சற்று இறக்கமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் டிரைவர்கள் இறங்கியதும் ரெயில் மெல்ல நகர தொடங்கியது. பின்னர் ரெயில் வேகமெடுத்து ஓட தொடங்கியது.
இதனால் ரெயில்வே ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரெயில் செல்லும் வழித்தடத்தில் இருந்த அனைத்து ரெயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. தண்டவாளத்தை யாரும் கடக்காத வண்ணம் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர்.
அதே வேளையில் சரக்கு ரெயில் நிறுத்துவதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்தன. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் பதற்றமும், பீதியும் அதிகரித்தது.
ரெயில் பல ரெயில் நிலையங்களை கடந்து, 70 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் ஓடியது. பின்னர் பஞ்சாப் மாநிலத்தின் உஞ்சி பாசி ரெயில் நிலையம் அருகே மணல் மூட்டைகள் மற்றும் மர தடுப்புகளை பயன்படுத்தி ரெயில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறிய ரெயில்வே அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் அதிவேகத்தில் சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.