அம்ரித் திட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.14½ கோடியில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அடிப்படை வசதிகள்
ரெயில் நிலையங்களில் அம்ரித் திட்டத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரெயில்வே திட்டப்பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் புதுடெல்லியில் இருந்தப்படி பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் அடிக்கல் நாட்டியும், திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் ரூ.14 கோடியே 48 லட்சத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் விழா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் காணொலியில் ஒளிபரப்பப்பட்டன. இதில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், பா.ஜனதாவினர், காங்கிரஸ் கட்சியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவ-மாணவிகள், ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நுழைவு வாயில்
இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தப்படுவது தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டன.
ரெயில் நிலையத்தில் புதிய நுழைவுவாயில், வாகனங்கள் நிறுத்த விரிவான இட வசதி, கட்டிடத்தின் முகப்பு தோற்றம் மாற்றம் உள்பட நவீனமயமாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது லிப்ட் வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைமேடைகளில் மேற்கூரைகள் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த திட்டப்பணிகள் முடிவடைந்ததும் புதுக்கோட்டை ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன் காணப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.