ஆலங்குடி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை ஊராட்சியில் எம். ராசியமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி சார்பில் சர்வோதயா விவசாய பண்ணைக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்து இருந்ததால் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணி நிறைவு பெறுவதற்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தும் தயாராக உள்ளது. ஆனால் இந்த சாலை பணி 2 மாதங்களாக முடிவடையாமல் உள்ளது. மேலும் இந்த சாலையில் தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ளதால் அந்த நபர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சென்று உள்ளார். இதனால் இந்த சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
சாலை மறியல்
மேலும் இந்த சாலைக்கு பட்டா வழங்கிய அலுவலர்களை கண்டித்தும், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை முழுமையாக நிறைவு செய்ய வலியுறுத்தியும் எம்.ராசியமங்கலம் பொதுமக்கள் பாச்சிக்கோட்டை ஊராட்சி அலுவலகம் எதிரில் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், உடனடியாக சாலை பணியும் தொடங்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.