மீமிசலில் தமுமுக சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு



மீமிசலில் தமுமுக சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி பகுதிகளில்   எந்தவித அடிப்படை வசதியையும் செய்து தராத ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலரையும் கண்டித்து தமுமுக சார்பாக 21.02.24 அன்று சாலைமறியல் நடைபெறயிருந்த நிலையில் 20.02 24 அன்று ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானம் பேச்சுவார்தையில் கோரிக்கைகள் போர்கால அடிப்படையில் செய்து தருவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இசைவு தெரிவித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்படுகிறது.

இப்படிக்கு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
ஆவுடையார்கோவில்
(ஒன்றியம்)
புதுக்கோட்டை(மாவட்டம்)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments