பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரம்





பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தை வருகிற ஜூன் மாதம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பட்டுக்கோட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. தற்போதைய பழைய பேருந்து நிலையம் 27 பஸ் நிறுத்தங்களுடன் கூடிய "பி" வகுப்பு பேருந்து நிலையம் ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மைய பகுதியில் தற்போது பேருந்து நிலையம் உள்ளது. இதனால் அதிகமான பேருந்துகள்  நகருக்குள் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் தற்போதைய பேருந்து நிலையம் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய இடவசதிகளுடன் இல்லை. இதையடுத்து பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியில் 6.50 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட "ஏ" வகுப்பு பேருந்து நிலையம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய பஸ் நிலையத்தில் 50 பஸ் நிறுத்துமிடங்கள், 120 கடைகள், 2 ஓட்டல்கள், 4 கழிவறைகள், 2 இருசக்கர வாகனம் நிறுத்துமிடங்கள், நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், பொருள் பாதுகாப்பு அறை, முன்பதிவு அலுவலகம், 3 காத்திருப்பு அறைகள் மற்றும் குடிநீர் வசதியும்  அமைக்கப்பட்டு வருகிறது.

வருகிற ஜூன் மாதத்தில் புதிய பஸ் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments