காலிக்குடங்களுடன் மாங்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்




குடிநீர் வழங்கக்கோரி மாங்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மின்மோட்டார் பழுது

புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆழ்குழாய் மின் மோட்டார் பழுது காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மாங்கோட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments