அடிப்படை வசதி கேட்டு நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு




கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஒன்றியத்தில்ஆத்தங்கரை விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள வடக்கு தெரு மற்றும் நடுத்தெருவில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு முறையான சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராத அரசு நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கறம்பக்குடி அருகே குளப்பன்பட்டி- ஆத்தங்கரை விடுதி விலக்கு சாலையில் பதாகை வைத்துள்ளனர். அதில் ஓட்டு கேட்டு யாரும் கிராமத்திற்கு வரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments