அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு துறைகளிலும் ஒன்றிணைந்து ஒற்றை சாளர முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா தலைமை தாங்கினார். முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை யு.டி.ஐ.டி. பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவேற்றம் செய்ய முடியாத கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கிக்கடன் உதவி பரிந்துரை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இம்முகாம் மூலம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாமில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 44 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர், மடக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகாமில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், தனி தாசில்தார் நாகநாதன் மற்றும் அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.