நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு பகுதிகளில் அடிப்படை வசதி செய்ய மறுக்கும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் & நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம்




நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு  பகுதிகளில்    அடிப்படை வசதி செய்ய மறுக்கும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் & நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து   தமுமுக சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் தமுமுகவின் சார்பில் அளித்துள்ளனர்.

இது குறித்து தமுமுக மமக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூத் அவர்கள் முகநூலில் வெளியிட்ட செய்தியில் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் எந்தவிட அடிப்படை வசதிகளும்  செய்யாத  ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கடந்த 21.02.24 அன்று மீமிசல் செக்போஸ்ட் அருகில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது

கடந்த 20.02.24 அன்று ஆவுடையார்கோவில் வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானகூட்டத்தில் ஒரு வாரத்தில் குண்டும் குழியுமாக உள்ள  ஆர்.புதுப்பட்டினம் சாலை கிராவல் கொண்டு சரிசெய்து தரப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்  வாக்குறுதி அளித்தும்  பத்து நாட்கள் கடந்தும்  இதுநாள் வரை எந்தவிட பணிகளுக்கு செய்யாதது வன்மையாக கண்டிக்கதக்கது. தொடர்ந்து நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மக்களை வஞ்சித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து எதிர்வரும் 09.03.24 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மீமிசல் செக்போஸ்ட் கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

தகவல்

வழக்கறிஞர் B.சேக் தாவூதீன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments