மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பண்பாடு மற்றும் விளையாட்டு வார போட்டிகள் இணைய வழியில் தேர்வு செய்தல் நிகழ்வு




மணமேல்குடி ஒன்றியத்தில்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பண்பாடு மற்றும் விளையாட்டு வார போட்டிகள் இணைய வழியில் தேர்வு செய்தல் நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் இணையவழியில் தேர்வு செய்தல் நிகழ்வினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திரு. செழியன் மற்றும் திருமதி இந்திராணி அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமையில் தொடங்கியது.

இந் நிகழ்வில் ஆவுடையார் பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு சார்லஸ் மனோகரன் மற்றும் பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மீனாட்சி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் போட்டிகளை நடத்தி கூகுள் டிரைவில் மற்றும் எமிஸ் ல் பள்ளி அளவில் பதிவு செய்ததை கொண்டு வட்டார அளவில் 11 போட்டிகளில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், மாறுவேட போட்டி, கைவினைப் பொருட்கள் செய்தல், பாரம்பரிய நடனம், கருவி இசை இசைத்தல், பாட்டு போட்டி ,கண்காட்சி, பேச்சுப்போட்டி, நாட்டிய நாடகம் மற்றும் பல குரல் போன்ற போட்டிகளில் சிறப்பாக செய்த மாணவர்களை வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டது.

 வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

இந்த தலைப்புகளில் மாணவருடைய படைப்பாற்றல் மற்றும் கற்பனையை ஊக்குவிக்கும் மற்றும் கலாச்சாரம் வரலாறு மற்றும் சமூக மதிப்புகளையும் பல்வேறு அம்சங்களை பற்றியும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை நமது அரசு வழங்கு வருகின்றன. 

இந்நிகழ்வில் 30 நடுவர்கள்  ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments