அதிராம்பட்டினம் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 7 கிலோ வாலை மீன்




அதிராம்பட்டினம் கடற்பகுதியான கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். சமீப காலமாக கடலில் மீன் வரத்து குறைவாக உள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஏரிப்புறக்கரை துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் 7 கிலோ எடை கொண்ட வாலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் ரூ.4 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் கடல் பகுதியை பொருத்தவரை மற்ற கடல் போல் இருக்காது. சேறும், மணலும் கலந்த கடல் பகுதியாக இருப்பதால் பெரிய வகையான மீன்கள் வலையில் சிக்குவது அரிது. நேற்று 7 கிலோ எடை கொண்ட வாலை மீன் வலையில் சிக்கியது. இந்த வகை மீன் மிகவும் ருசியாக இருக்கும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments