அதிராம்பட்டினம் கடற்பகுதியான கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். சமீப காலமாக கடலில் மீன் வரத்து குறைவாக உள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஏரிப்புறக்கரை துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் வலையில் 7 கிலோ எடை கொண்ட வாலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் ரூ.4 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் கடல் பகுதியை பொருத்தவரை மற்ற கடல் போல் இருக்காது. சேறும், மணலும் கலந்த கடல் பகுதியாக இருப்பதால் பெரிய வகையான மீன்கள் வலையில் சிக்குவது அரிது. நேற்று 7 கிலோ எடை கொண்ட வாலை மீன் வலையில் சிக்கியது. இந்த வகை மீன் மிகவும் ருசியாக இருக்கும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.