கரூர் திருக்காம்புலியூரில் மீன் விதைப்பண்ணையும், புதுக்கோட்டை வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் மீன் இறங்குதளத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
கலெக்டர்களுக்கு பாராட்டு
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்கள் ஆகியவற்றை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளில் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.அந்த வகையில், 2023-2024-ம் ஆண்டில், மாவட்டத்தின் பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம், உயர் பிறப்பு விகிதம் மற்றும் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை நுட்பங்கள், சட்டம் ஆகிய காரணிகளை கவனமுடன் பரிசீலித்ததில், ராமநாதபுரம், காஞ்சீபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அந்த மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி, ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு தங்கப்பதக்கமும், காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கு வெள்ளிப்பதக்கமும், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிற்கு வெண்கலப்பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.
மீன் இறங்குதளங்கள்
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் நவீனப்படுத்தப்பட்ட மீன் விதைப்பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கம்மாபட்டினம் மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ரூ.136.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப்பண்ணை ஆகியவற்றை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.