புதுவலசை, புதுமடம் ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்குகள் நவாஸ்கனி எம்.பி. திறந்து வைத்தார்




ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்ற பணிகள், அடிக்கல் நாட்டு விழாக்கள் நடந்தன. இதில் நவாஸ்கனி எம்.பி. கலந்து கொண்டார். முதல் நிகழ்ச்சியாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தொருவளூர் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், பழனிவலசையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், திருப்பாலைக்குடி ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை மற்றும் புதுமடம் ஊராட்சிகளில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை நவாஸ்கனி எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் பிரபாகரன், மண்டபம் யூனியன் துணைத்தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார், மண்டபம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, முருகானந்தவள்ளி, தொருவளூர் ஊராட்சி தி.மு.க. செயலாளர் லோகநாதன், தொருவளூர் ஊராட்சி தலைவர் பஜ்ருதீன், சித்தார்கோட்டை ஊராட்சி தலைவர் முஸ்தரி ஜஹான்ரைசுதீன், புதுவலசை ஊராட்சி தலைவர் மீரான்கனி, பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியா பானு, புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், புதுவலசை ஊராட்சி துணை தலைவர் பவுசுதீன், ஒன்றிய கவுன்சிலர் கமருதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சாபிர்கான், எஸ்.டி.யூ. மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments