ரகசிய தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, மீமிசல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் கடற்கரை பகுதியாகும். இங்கிருந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து சில நேரங்களில் மர்ம கும்பல் இலங்கைக்கு கடல் மார்க்கமாக படகு மூலம் கஞ்சா கடத்த முயற்சிக்கும் சம்பவமும் அவ்வப்போது நடப்பது உண்டு.
இதில் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா பொட்டலங்களை பண்டல், பண்டலாக பறிமுதலும் செய்துள்ளனர். இந்த நிலையில் மீமிசல் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக ராமநாதபுரத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் மீமிசல் வந்து கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு கொண்டு சென்றதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
400 கிலோ கஞ்சா பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமார் 400 கிலோ அளவில் இருக்கும் எனவும், அது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விவரம் தெரிவிப்பார்கள் என போலீஸ் வட்டாரத்தில் கூறினர். மேலும் இலங்கைக்கு படகில் கடல் மார்க்கமாக கஞ்சாவை கடத்த முயற்சித்த கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கடற்கரை பகுதியில் இருந்து கைப்பற்றியதாகவும், எஸ்.பி.பட்டினத்தில் இது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.