ஆக்கிரமிப்புகள்
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள நாட்டானிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள உப்பலத்தில் சிலர் இறால் பண்ணை அமைத்துள்ளனர். இந்த இறால் பண்ணை அமைத்துள்ள இடம் அரசு நிலம் என்பதால் இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சட்ட விரோதமான மின் இணைப்பை மின்சார வாரிய அதிகாரிகள் ரத்து செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த இறால் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அதிகாரிகள் அகற்றினர்.
இடித்து அகற்றம்
கடந்த 3 தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் இயங்கி வந்த இறால் பண்ணையில் ரூ.110 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட இடமும் அரசு புறம்போக்கு இடமாகும். நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த இடத்தையும் வருவாய் துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, ஆய்வாளர் சாதிக் பாஷா, கனகராஜ், மற்றும் ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், மீமிசல் வருவாய் ஆய்வாளர் விஜயா ஆகியோர் உடனிருந்தனர். கோட்டைப்பட்டினம் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.