மீமிசலில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெறுகிறது 

நாள் : 18.03.2024 திங்கட்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

இடம்: மாடத்தியம்மாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மீமிசல்

சிகிச்சையளிக்கும் தோல் நோய் மருத்துவர் தமிழகத்தின் தலைசிறந்த தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவர்களில் ஒருவரான மக்கள் மருத்துவர்

Dr.ச.தெட்சிணாமூர்த்தி MBBS.,DV.,

சிகிச்சையளிக்கும் நோய்கள்

முகப்பருக்கள்

முடி உதிர்தல், பொடுகு,

நாள்பட்ட படை, அரிப்பு, சிரங்கு

மருக்கள் நீக்கம்,

ஒவ்வாமை, சிவப்பு பட்டைகள்

முகப்பரு தழும்புகள்

@ சோரியாசிஸ்

முகம் பொலிவாக

வெண் புள்ளிகள்

பால்வினை நோய்கள்

கன்னம், மூக்கில் ஏற்படும் கருமை நீக்கம்

குழந்தைகளுக்கான அனைத்து தோல் நோய்கள்

இவண்

திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு
அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்

கிங்ஸ் ரோட்டரி கிளப், மீமிசல்.

தொடர்புக்கு: 9842894104

இது குறித்து  திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு தலைவர் தெட்சிணாமூர்த்தி, MBBS., DDVL கூறுகையில் 




மீனவர்கள் நிறைந்த மீமிசலில் மாபெரும் தோல்நோய் சிறப்பு மருத்துவ முகாம் வரும் திங்களன்று (18.03 2024) :

   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, தோல் நோய் மருத்துவ முகாம்களை மக்களின் நோய் தீர்க்கும், துயர் துடைக்கும் முகாம்களாக மட்டுமல்லாமல், அவர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் ஆயுதமாகவும், தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது.

    அந்த வகையில் இந்த முறை மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் உடன் இணைந்து மீமிசலில், மீனவர் மக்கள் நிறைந்திருக்கக் கூடிய, பகுதியில் தோல் நோய் சிறப்பு முகாமை நடத்துகிறது. 

மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நோய் போக்கி,நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் தோல் நோய் மருத்துவ முகாம்கள்..

கஜா புயலிலில் டெல்டா மக்கள் பாதிக்கப்பட்ட போது தொடர்ச்சியாக தோல் நோய் மருத்துவ முகாம்கள் மட்டுமல்லாமல் பொதுமருத்துவ முகாம்களையும் நடத்தினோம்.

2022 இல் விவசாயிகள் தொழிலாளர்கள்  நிறைந்த ஆவுடையார் கோயிலில் நடத்தப்பட்டது.

2023 ஜனவரி 6 இல், மனிதப் பேரவலம் நடந்த , வேங்கை வயலில் தோல் நோய் மருத்துவ முகாம் நடத்தி அந்த மக்களின் தோளோடு தோள் நின்றோம்.

அந்த ஆண்டிலேயே மீனவர் மக்கள் நிறைந்திருக்க கூடிய மணமேல்குடியில் நடத்தினோம். ஏராளமான மக்கள் பயன் பெற்றனர்.

சென்ற ஆண்டு அறிந்தாங்கியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, மருத்துவ முகாம் நடத்தினோம்.

சென்னை பெரு வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட போது வேளச்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட ஏழை எளிய  மக்கள் நிறைந்த பகுதியில்  மருத்துவ முகாம்கள் நடத்தினோம்.

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட, எண்ணூரில் தோல் நோய்  மருத்துவ முகாம் சென்ற ஆண்டு நடத்தப்பட்டது,

2024 இன் முதல் நாளி லேயே, புத்தாண்டில், புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோல் நோய் மருத்துவ முகாம் நடத்தினோம். தமிழகமெங்கும் எதிரொலித்தது அது.

இப்போது மீனவர்கள், நிறைந்த மீமிசலில் வரும் திங்களன்று, மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாம் நடத்தப்பட இருக்கிறது.

 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.

-Dr. ச. தெட்சிணாமூர்த்தி, MBBS., DDVL.,
- தலைவர்,
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
-அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்,




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments