அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
மணமேல்குடி தாலுகா வெட்டிவயல் ஊராட்சி கிளாரவயல் கிராமத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது. எனவே அருகே உள்ள அரசு நிலத்தில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தநிலையில் பள்ளி கட்டிடம் கட்ட இருக்கும் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டனர். மேலும் இதுதொடர்பாக வெட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார், மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்து அகற்றினர்.
அப்போது வருவாய் துறையினரிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தலையிட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.