1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வை ஏப்ரல் 13-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 22-ந் தேதியுடனும், பிளஸ்-1 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
முன்கூட்டியே தேர்வு
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபட இருக்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி இந்த இடைப்பட்ட காலத்துக்குள் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வை தேர்தல் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
அதன்படி ஏப்ரல்13-ந் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிப்பதற்கான ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.