புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே இறால் பண்ணையில் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தியதில் ஹாசிஸ் கஞ்சா எனப்படும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் ரூ.111 கோடி அளவில் சிக்கியது. இதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறால் பண்ணையின் உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுல்தான் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சுல்தானின் செல்போன் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இலங்கைக்கு தப்பிச்சென்றிருக்கலாம் அல்லது வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருவதாகவும், அவரும் தலைமறைவாக இருப்பதாக சுங்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அவரையும் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.