அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் குறித்து முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. தேர்தல் அதிகாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். பயிற்சியில் அறந்தாங்கி தாசில்தார் திருநாவுக்கரசு, ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள 30 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை குறித்து முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அறந்தாங்கி மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், தேர்தல் துணை தாசில்தார் இளஞ்சேரன், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.