தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் முதன்முறையாக பிறவி இதய குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறினார்
பிறவி இதய குறைபாடு
தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கேத்லேப் (இருதய உட்செலுத்தி எதிரியக்க ஆய்வுக்கூடம்) கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 8,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்பிற்கு உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் செய்யும் சிகிச்சை 1,402 பேருக்கும், 4 மணி நேரத்திற்குள் செய்யும் சிகிச்சை 2,114 பேருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இதய துடிப்பு குறைவான நோயாளிகள் 41 பேருக்கு நிரந்தர இதய துடிப்பு கருவியும், 143 பேருக்கு தற்காலிக இதய துடிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பிறவி குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு இதயத்தில் நிலைத்த ரத்த நாளம் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதனை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை இன்றி இதய உட்செலுத்தி சிகிச்சை முறையில் காயில் வைத்து இதய குறைபாட்டை சரி செய்யும் சிகிச்சை முதன்முறையாக அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 குழந்தைகளும் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். அவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன், பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தார்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி
பின்னர் டாக்டர் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன்முதலாக பிறவியிலேயே குறைபாடுடைய 3 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணமடைந்துள்ளனர். இந்த சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் செய்வதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிறவி இதய குறைபாடு இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொந்தரவு, மூச்சுதிணறல் போன்றவை ஏற்படும். இதனை வைத்து அறிந்து கொள்ளலாம். இதற்காக சுகாதாரத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பிறவி குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிவதற்கான குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் ஆய்வு செய்து, குறைபாடு இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.
பிரசவ இறப்பு குறைந்தது
அவ்வாறு இந்த குழந்தைகளுக்கு இதய துறை தலைவர் டாக்டர் ஜெய்சங்கர், தாய் திட்ட டாக்டர் மருதுதுறை மற்றும் மயக்கவில் துறை, குழந்தைகள் நல துறை தலைவர் ஆகியோர் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தஞ்சை மாவட்டத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள், சிசு இறப்பு போன்றவை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தஞ்சை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.