கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருகிறது 

ஒருசில கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல்,வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின்திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனைஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில்வறண்ட வானிலை நிலவக் கூடும்.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 22, 23 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரியை ஒட்டியும், வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தும் இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 21.03.2024 வியாழக்கிழமை காலை 6 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து  மழை நீண்ட நாட்களுக்கு பிறகு  பெய்து வருகிறது குளிர்ச்சியான சூழல்நிலவியது.

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது 

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments