புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் பரவலாக மழை




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இந்தநிலையில் நேற்று கடலோர பகுதிகளான கட்டுமாவடி முதல் மீமிசல் வரை பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல் அறந்தாங்கி, நாகுடி, வல்லவாரி, ஆய்ங்குடி, ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் கிருஷ்ணாஜிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments