அறந்தாங்கியில் அரசு பஸ்சை திருடி விபத்தை ஏற்படுத்திய ஆசாமியால் பரபரப்பு




அறந்தாங்கியில் அரசு பஸ்சை திருடி விபத்தை ஏற்படுத்திய ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு பஸ் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 67 பஸ்கள் உள்ளன. ஆனால் பஸ்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் 12 பஸ்கள் பணிமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் திருவாடானை அரசு பஸ்சை மர்ம ஆசாமி திருடி சென்றான்.

இதுகுறித்து அறந்தாங்கி அரசு பணிமனை மேலாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விபத்து

இந்தநிலையில், திருட்டுப்போன அரசு பஸ் அறந்தாங்கி அருகே இ.சி.ஆர். ரோட்டில் டேங்கர் லாரி மீது விபத்துக்குள்ளாகி நிற்பதாக தகவல் கிடைத்தது. மேலும் அந்த பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து இருந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரசு பஸ்சை திருடி சென்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, போலீசார் அந்த அரசு பஸ்சை கைப்பற்றி ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments