கடலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி நண்பர்கள், பெற்றோர் கதறல்




ஆற்றாங்கரையில் கடலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார். அவரது உடலை பார்த்து நண்பர்கள், பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

பிளஸ்-2 மாணவர்

ராமநாதபுரம் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் கல்யாணகுமார். இவருடைய மனைவி அபிராமி. இவர்களது மகன் ஹர்ஷத் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வுகளை எழுதி முடித்திருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ஹர்ஷத்தை அவரது நண்பர்கள் ஆற்றாங்கரை கடற்கரை அழகை சுற்றி பார்க்க அழைத்து உள்ளனர். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததால் வீட்டில் உள்ளவர்களிடம் ஹர்ஷத் சொல்லி விட்டு நண்பர்களுடன் சென்றார்.

கடலில் மூழ்கி சாவு

அப்போது ஆற்றாங்கரையில் கடலும் - வைகை ஆறும் சந்திக்கக்கூடிய இடத்தில் சுற்றிப் பார்த்தபோது எதிர்பாராமல் ஹர்ஷத் கடலில் மூழ்கினார். இதை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதற்கிடையே மாணவரின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஆற்றாங்கரை துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் சென்ற நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments