மதுரை-தொண்டி சாலையில் சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார் 3 பேர் காயம்




மதுரை-தொண்டி சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் திருவாடானை தாலுகா அச்சங்குடி கிராமத்தில் சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கருவேல மரக்காட்டிற்குள் கார் சிக்கி கொண்டது. இதில் காருக்குள் இருந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி உள்பட 2 பெண்கள், கார் டிரைவர் சுகுமாறன்(வயது 46) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments