அறந்தாங்கியில் எல்.ஐ.சி. பெண் முகவரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதால் நடவடிக்கை




உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற எல்.ஐ.சி. பெண் முகவரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் ஒத்தக்கடை பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பச்சலூர் பகுதியில் வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ எடுத்து சென்றது இளஞ்சாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கவிதா என்பது தெரியவந்தது.

ரூ.1¼ லட்சம் பறிமுதல்

மேலும், அவர் எல்.ஐ.சி. முகவர் என்பதும், எல்.ஐ.சி.யில் பணம் கட்டுவதற்காக வசூல் செய்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 கொண்டு வந்ததாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments