வாகன சோதனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் ஒத்தக்கடை பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பச்சலூர் பகுதியில் வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ எடுத்து சென்றது இளஞ்சாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கவிதா என்பது தெரியவந்தது.
ரூ.1¼ லட்சம் பறிமுதல்
மேலும், அவர் எல்.ஐ.சி. முகவர் என்பதும், எல்.ஐ.சி.யில் பணம் கட்டுவதற்காக வசூல் செய்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 கொண்டு வந்ததாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500-ஐ ஆர்.டி.ஓ. சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.